Wednesday, March 23, 2005

தண்ணீர் தண்ணீர்......... சில தீர்வுகள்

நீர் வளபாதுகாப்பு பற்றிய நேற்றைய பதிவில் காணப்படு;ம் சில பிரச்சனைகளுக்கான சாத்தியமான தீர்வுகள்.

தீர்வு என்று வரும் போது ஏற்கனவே வேறு நாடுகளில் பயன் படுத்தப்பட்டவற்றை அப்படியே இது இதற்கு தீர்வு என கூறமுடியாது.

பல இடங்களிலும் பயன்படுத்தப்படும் முறைகளை ஆராய்ந்து எமது சூழலுக்கு, வாழ்க்கை முறைக்கு, பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப மாற்றங்களை செய்வது அவசியமாகும்.

எமது நோக்கம் பலரது கவனத்தையும் ஈர்க்காத ஆனால் முக்கியமான பிரச்சனைகளை கவனத்துக்கு கொண்டுவருவதே.
சில சாத்தியப்படக்கூடிய தீர்வுகள்
உரப்பாவனையை முற்றாக குறைக்கமுடியாது.
ஆனால் சில செயன்முறைகளை பின் பற்றி நைத்திரேற்றாக்கத்தை குறைக்கமுடியும்.


1.ரார் பூச்சிட்ட யூரியா [Tar coated urea]இது நமது நாட்டில் கிடைப்பது அரிது. இதன் பயன் உரம் உடனடியாக கரைவதை குறைத்து சிறிது சிறிதாக[Slow releasing] மண்ணுக்கு இழக்கப்படுவதால் தாவரம் அதனை உடனடியாக பயன்படுத்திவிடும்.
இதற்கு பிரதியீடாக...இலங்கையில்


2.வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து உரமிடுதல் பயனளிக்கும் என கண்டறியப்பட்டது. ஆனால் மக்கள் பாவனைக்கு வரவில்லை. வேப்பம் பிண்ணாக்கில் காணப்படும் இரசாயனப் பொருட்கள் நைத்திரேற்றாக்கும் நுண்ணங்கி செயற்பாட்டை நிரோதிப்பதால் உரம் நீரில் கழுவிசெல்லப்படுவது குறையும்.


3.ஒரே தடவையில் முழு உரத்தையும் இடாமல் சிபாரிசு செய்யப்பட்ட அளவை சிறிது சிறிதாக பிரித்து [split application]சிறிய கால இடைவெளிகளில் இடல் .இதனை தாவரங்கள் வினைத்திறனாக அகத்துறுஞ்சுவதால் இழப்பு மாசாக்கம் என்பவை தடுக்கப்படும்.


மலசலகூட கழிவுகளுக்கு.


1.நிலக்கீழ் வடிகாலமைப்பு மூலம் சேகரித்து தொழில் ரீதியான சுத்திகரிப்பு தற்போது சாத்தியமற்றது.[Drainage and Sewage treatment plants]


2.மலசலகூட குழிகளின் அனைத்து புற சுவர்களையும் அடித்தளம் உட்பட நீர் ஊடுபுகமுடியாதவறு அமைத்தல் ஆனால் அடிக்கடி கழிவகற்றும் தங்கிகள் முலம் அகற்றவேண்டியிருக்கும்.


3.குழிகளில் பிரிவுகளை ஏற்படுத்தி முதலில் உள்ள சேகரிப்பு தாங்கியை மட்டும் நீர் ஊடுபுகமுடியாததாகவும் அது நீரல் நிரம்பி வடிந்து செல்வதற்கு அடுத்தநிலையில் உள்ள குழிகளை நீர் ஊடுபுககூடியதாகவும் அமைத்தல். இதன் மூலம் உடனடியாக கலப்பு ஏற்படும் சாத்தியம் இல்லது போவதுடன். முதல் குழியில் நொதித்லுக்கு உட்படும் போது பாதகமாக நுண்ணங்கிகள் இறந்துவிடும்.


4.குறிப்பிட்ட தூரக்கணக்கு நகரங்களுக்கு சரிவருமா? ஓருவீட்டின் கிணறும் மலசலகூடமும் 30 அடி தூரத்திலிருக்கும். ஆனால் அடுத்தவீட்டு குழி முதல் வீட்டின் கிணற்றுக்கருகில் இருக்கும். பின் எவ்வாறு தூர அளவை பேணுவது. அத்தோடு நிலத்தடி நீர் நிலையாக நிற்பதில்லை ஒரு இடத்தில் நீரகற்றப்பட அதை நிரப்ப சூழ உள்ள அனைத்து இடங்களிலிருந்தும் ஓடத்தொடங்கும். ஆகவே கலக்கமுடியதென்று கூறமுடியாது. ஆனால் குறைக்கமுடியும்.


யாழ்குடாவின் தீவகம் உட்பட ஏனையபகுதிகளிலும் கூரையில் விழும் மழைநீரை சேகரித்து பயன் பெறுவதற்கு தொட்டிகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால் அதன் வெற்றி மக்களின் அக்கறையிலேயே தங்கியுள்ளது.

Tuesday, March 22, 2005

தண்ணீர் தண்ணீர்...........

Image Hosted by ImageShack.us


இப்படி ஒரு தொடர் கவிதை எப்போதோ வசித்த ஞாபகம். நிச்சயமாக இது கவிதயல்ல.

உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீர் பற்றிய ஒரு பார்வை.

தண்ணீருக்கான தேவை அதாவது தரமான குடி நீருக்கான தேவை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. நன்னீராதாரங்கள் பரப்பளவில் வேகமாக குறைந்துவருகிறன. அத்துடன் இருப்பவையும் மாசாக்கத்துக்குள்ளாகிவருகிறன.

எம் தாயகத்தில் இருக்கும் நன்னீராதாரங்கள் மாசக்கமடைந்துவருவதும் பரப்பளவில் குறைவடைந்துவருவதும் மிகவும் கவலைக்குரியது. இதைபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பத்திரிகைகளில் இடையிடையே கட்டுரை வரும் அத்துடன் அதன் கதை முடிந்துவிடும்.

கேள்விக்குள்ளாகும் நிலத்தடி நீர் வளம்.

1. அதிகரித்த நீர் பாவனையால் வருடாந்தம் பெய்யும் மழை நீர் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நீரை மீள் நிரப்பமுடியாமை. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர் சமநிலையை பேணுவதற்காh முன்னோரால் ஆங்காங்கு அடைக்கப்பட்ட சிறிய குளங்கள் [யாழ்பாணத்து குளங்கள்] கைவிடப்படல் தூர்வாரப்படாமை. மழைநீர் தேங்கி நிலத்தின் கீழ் வடிந்து செல்லாமல் கடலை வீணே சென்றடைகிறது. மழை நீர் குளங்களில் தேக்கப்படும் போது அது சிறுக சிறுக வடிந்து சென்று நிலத்தடி நீர்ச்சமநிலையை பேணுகிறது.
வன்னி பெருநில வாழ்பனுபவம் கொண்டவர்களுக்கு இது புரியும் பெருங்குளங்களில் நீர்வற்றி வாய்க்கால் வரண்டால் சில இடங்களில் கிணறு வெறுமையாகிவிடும்.
வவுனியாவில் ஆங்காங்கு காணப்படும் குளங்களை நிரவி வீடமைத்து வருவதால் நீர்த்தட்டுபாடு ஏற்படுவாதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது.

2. உவர் நீர் ஊடுருவல். இதை யாழ்குடாநாட்டை வாழ்விடாக கொண்டவர்களில் யாரேனும் கண்டு அனுபவித்திருக்க முடியும். அதிகரித்த நீர் பாவனை காரணமாக அடித்தளத்திலுள்ள உவர் நீர் மேலெழல். ஆரம்பத்தில் நன்னீராக இருந்த கிணறுகள் பல இன்று உவர் நீராக மாறியுள்ளன.




  • 3. மலசலகூட கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கும் சாத்தியம். மாரிகாலத்தில் நீர் மட்டம் பலஅடி மேலெழும் போது இரண்டும் கலக்க முடியும்.

    4. நிலத்தில் கொட்டப்படும் இரசாயன உலோக பொருட்கள் மழை நீருடன் கலந்து நிரத்தடி நீரை மாசாக்கும் சாத்தியம்

    5. விவசாயத்தில் பாவிக்கப்படும் உரத்தில் காணப்படும் அமோனியா யுரியா போன்றவை நைத்திரேற்றாக்கத்துக்குட்படும். இவை மண் துணிக்கைகளால் பற்றி வைத்திருக்கப்பட முடியாதவை. மண்ணும் நைத்தரேற்றுக்களும் எதிரேற்றமுடையவை. இதனால் இலகுவில் கழுவிச்செல்லப்பட்டு நிலத்தடி நீரை அடைகிறது. இவ்வாறு மாசாக்கமடைந்த நீரை அருந்துவதால் புற்று நோய் பிறக்கும், குழந்தைகள் நீலக்குழந்தை நோய்க்கு உட்படல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

    இதை தீர்க்க.. ... .. ..

    தற்போது மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது.
    அத்துடன் சிக்கனமாக நீர்பாசன முறைகளை விவசாயத்தில் பயன்படுத்தல்.
    குளங்களின் புனருத்தாரணம்
    மhசாக்கும் கழிவுகள் பற்றிய கவனம் என்பவை மிகமுக்கியமானது. இதை பற்றி நாமனைவரும் சிந்தித்தால் நம் தாயகத்தை வளப்படுத்தலாம்.

    Tuesday, March 15, 2005

    வேயிலினருமை

    இன்று நாம இருக்கும் நாட்டில குறிப்பாக எமது பகுதில உள்ளவர்கள் புல்வெளிகளில் இருந்து ஆடி பாடி மகிழ்ச்சியாக கும்மாழமிட்டர்கள் .என்னடா விசேடம் என்று சிந்தித்த பொது தான் மண்டையில் உறைத்தது. இன்று சூரியன் நன்கு பிரகாசமாக காட்சி தந்ததோடு வெப்பநிலையும் 15 டிகிரி செல்சியசுக்கு கிட்ட வந்துவிட்தென்பது. வேயிலினருமை அவர்களுக்கு தெரிகிறது.

    Monday, March 14, 2005

    உயிர் பல்வகைமை பேணல் 1.மா வருக்கங்கள்

    நாட்டு மா வருக்கங்களை காப்போம்

    உயிர் பல்வகைமை எனும் பதத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள.; சாதாரணமாக சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட அலகு பரப்பில் காணப்படும் வேறுபட்ட அங்கிகளின் எண்ணிக்கை அல்லது வீச்சு எனலாம். இதை உதாரணம் முலம் பார்ப்போம்ஒரு சிறிய பராமரிப்பற்ற காணியை எடுத்து கொள்ளுங்கள். அங்கு வேறுபட்ட புற்கள் கொடிகள் செடிகள் பல்வேறு மரங்கள் சிறு விலங்குகள் என காணப்படமுடியும்.ஆனால் ஒரு தேயிலைப் பெருந்தோட்டத்தில் தேயிலையை தவிர பிற மரங்களை காணபது அரிது. அதாவது அங்கு உயிரியல் பல்வகைமை அரிது எனலாம். இப்பல்வகைமையானது குறிப்பிட்ட ஒரு இனத்துக்குள்ளும் காணப்படமுடியும். ஊதாரணமாக மனிதரிடையே ஆபிரிக்கர் தென்னாசியர் அரபியர் சீனர் என வேறுபடுவது போல்.
    நாம் இங்கு இப்பத்தியில் எடுத்தாள விரும்புவது மா இனத்தில் காணப்படும் இன பல்வகைமை பற்றியும் அதன் அழிவுக்குள்ளாகிவரும் ஆதியான வருக்கங்கள் பற்றியுமாகும்.
    நமக்கு தெரிந்த பயிர் செய்கையில் நாட்டப்படும் மா இனங்கள்

    1.கறுத்த கொழும்பான்
    2.வெள்ளைக் கொழும்பான்
    3.விலாட்டு
    4.அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு]
    5.செம்பாட்டான்
    6.சேலம்
    7.பாண்டி
    8.களைகட்டி
    9.பச்சதின்னி
    10.கொடி மா [ஊருக்கு புதியது தற்போது சில வீடுகளில் உண்டு சரியான பெயர் தெரியாது]
    11.மத்தள காய்ச்சி [இதன் சரியான பெயர் தெரியாது நமது காணியில் இரண்டு நின்றது பெரிய காய் ஆனால் நார் அதிகம். இப்போது இரண்டும் தறித்தாகிவிட்டது.]

    [இதில் சொல்லப்பட்டவை தமிழீழத்தில் ,இலங்கையில் காணப்படுபவை ]

    இவற்றை விட நாட்டு மா என சொல்லப்படும் புளி மாக்கள் பல உண்டு
    நாம் சிறுவனாய் இருந்த காலத்தில் ஆறுக்கு மேற் பட்ட புளி மாக்கள் நமது காணியில் நின்றன. அவற்றிற்கு நாம் வழங்கிய பெயர்கள்
    வட்டக்காய்ச்சி
    கட்டை மா
    கறி மா [இதன் காய் தனியே மாங்காயில் கறிவைக்க நல்ல ருசி]
    பெயரிடாத ஏனையவை 3.
    தற்போது எஞ்சியுள்ளது மூன்று மட்டுமே.
    இதே போல நம்மூரில் பலரது காணிகளில் பல தனித்துவமான நாட்டு புளி மாக்கள் இருந்தன. இப்போது பார்த்தல் ஊரில் விரல்விட்டு எண்ணக்கூடிய புளி மாக்களைத்தான் காணலாம்.புளிமாக்களின் காய்கள் கறிக்கும் சொதிக்கும் போடுவதோடு சரி. ஆனால் அவற்றின் விதைகளில் இருந்து பெறப்படும் நாற்றுக்கள் நல்ல வருக்கங்களை ஒட்டுவதற்கு ஒட்டுகட்டைகளாக பயன்படுத்துவார்கள். அதைவிட பெரிதாக பொருளாதார முக்கியத்துவம் அற்றிருப்பினும் உயிரியல் ரீதியில் முக்கியமானவை. அவை சூழலுக்கு வார்த்தகரீதியான வருக்கங்களிலும் அதிக இயைபாக்கமுடையவை. அவற்றின் இயலபுகள் பற்றி எவ்வித ஆர்வமும் எடுக்கப்படுவதில்லை. அவை காலப்போக்கில் முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்பதில் பெரிதாக ஐயமில்லை. அவை அழிக்கப்படுவதனால் உயிர்சூழலில் மீளப்பெறமுடியாத வகையில் பாரம்பரை [ஜீன்கள் ]அலகுகள் இழக்கப்படுகிறன.அவற்றை பேண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் தனியாருடைய காணியில் அவற்றை பேணுவது கடினம். வட்டக்கச்சியில் [விவசாய கண்கட்சி நடந்த பண்ணை யில் என நினைக்கிறேன்] நல்லின மாக்களுக்கு ஒட்டு கிளைகள் பெறுவதற்கு ஒரு பண்ணை போல நாட்டு மாவருக்கங்களை பேணுவதற்கும் ஒரு பண்ணை அமைத்து தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் நாட்டு மா வருக்கங்களை பேணவேண்டும்.இதை முளைய முதலுரு பாதுகாப்பு என்பர் [Germplasm conservation].
    அதே போல பல தாவர இனங்கள் அருகிவருகிறன. அவற்றை அடையாளங்கண்டு பேணமுயற்சிப்பது அவசியம்.
    நாம சின்ன பையனா இருந்த போது:
    நறுவிலி இதன் பழத்தை சாப்பிட்டால் சொண்டு ஒட்டும் அத்துடன் அதிக தாகமெடுக்கும். ஊரில் ஓருமரம் இருந்தது தற்போது இருக்கோ இல்லையோ.
    அதே போல கருநாவல் என்று பிஞ்சில் சிவப்பாக தண்ணி பிடிப்பான விதையுடனும் இருக்கும். பழம் நாவல் பழ நிறத்தில் தடித்த விதையுடன் கணப்படும் அரிவரி முடிஞ்சு வரேக்கை அதை பிடுங்கி சாப்பிட அடிபாடு வரும் இப்ப அந்த மரத்தை காணகிடைப்பதில்ல.

    ஆகவே நம்ம நாட்டில இருக்கிற தாவர வருக்கங்களை பேண நடவடிக்கை எடுப்பது அத்தியவசியமானது.

    Friday, March 11, 2005

    செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம்

    Image Hosted by ImageShack.us
    Image Hosted by ImageShack.us

    செவ்விளநீர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

    நிறம் - செவ்விளநீர் நிறம் என்று ஒரு நிறத்தை சுட்டுவோம்
    வருத்தத்துக்க குடிப்பது......
    கோயிலுக்கு அபிசேகம் செய்ய...........
    நாம் குடிக்கிறோமோ இல்லையோ கோயிலுக்கு தப்பம தேடி கொடுப்போம்.

    இதன் ஆங்கில பெயர் King Coconut
    தாவரவியற் பெயர் Cocos nucifera Var. aurantiaca
    இது இலங்கைக்கு தனித்துவமானது. ஆதாவது இலங்கையில் மட்டும் சிறப்காக காணப்படுகிறது.

    தற்போதய உலகில் செயற்கை குளிர் பாகங்களின் நிறப்பொருட்கள் இரசாயன சேர்க்கைகள் காரணமாக இயற்கை குடிபானங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுவரும் சூழ்நிலையில் செவ்விளநீர் பற்றி பார்ப்பது பொருத்தமானது என கருதுகிறேன்.

    குரும்பை பிடித்ததிலிருந்து 6-8 மாத பருவமுடைய இளம் பருவம் இளநீர் பருவமாகும.;
    இளநீரின் போசணை பெறுமதி

    நீர் 95.5%
    புரதம் 0.1%
    கோழுப்பு 0.1%
    கனியுப்புகள் 0.4%
    காபோவைதரேற்றுகள் 4.0%

    அத்துடன் இளநீரில் காணப்படும் சில சுயாதீன அமினோ அமிலங்களின் அளவு பசுப்பாலில் காணப்படுவதிலும் அதிகமாகும். அத்துடன் விற்றமின் சி விற்றமின் பி கூட்டம் என்பனவும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது.

    பயன்கள்
    இளநீர் இயற்கையாகவே கிருமி தொற்று அற்று இருப்பதால் குளுக்கோசு கரைசலுக்கு பதிலாக நோயாளிகளுக்கு செலுத்த முடியுமாம். அவ்வாறு இரண்டாம் உலக யுத்த காலத்தில் பயன்பட்டதாக கூறப்படுகிறது.

    குடலில் காணப்படும் குடற் புழக்கள் வயிற்றோட்டம் என்பவற்றுக்கு நிவாரணமாக

    வாந்தியை கட்டுப்படுத்த

    அம்மை நோய்களின் வீரியம் அல்லது அதன் தாக்கத்தை குறைக்க

    இதில் பொட்டாசியம் அதிகளவு காணப்படுவதால் சிறுநீர் போக்கு அதிகரிக்கும்.

    சிறுநீரகத்தில் ஏற்படும் கனியுப்பு நஞ்சாக்கத்தை குறைத்தல்

    குழந்தைகள் நோயாளிகளுக்கான ஊட்ட பானமாகும்

    முட்டை வெண்கருவுடன் கலந்து செயற்கை முறை சினைப்படுத்தலுக்கான விந்து ஐதாக்கியாக.

    தாவர ஓமொன்கள் காணப்படுவதால் இழையவளர்ப்பு ஊடகத்திற்கு

    நொதிக்கப்பட்ட இளநீரிலிருந்து நேரா டீ கொகோ எனும்

    நொதித்தலுக்குட்படுத்தப்பட்ட குடி பானம் தயாரிப்பு.
    தகரத்திலடைத்த இளநீர்


    இலங்கையிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளநீர் வருடாந்தம் ஏற்றுமதியாகிறது.

    எமது புலத்தமிழர்கள் பல்வேறு தொழில் முயற்சியிலும் ஈடுபடுகிறனர். அவர்கள் செவ்விளநீர் ஏற்று மதியிலும் ஈடுபடலாமே.
    இங்கு செவ்விளநீர் ஏற்றுமதி என்பது தகரத்திலடைத்ததை அல்ல முழமையான இளநீரையே சுட்டுகிறேன்
    ஏற்றுமதி செய்வதற்கு அதற்கான தொழில்நுட்பத்தை பயன் படுத்துவது அத்தியாவசியமானது.
    சரியான பருவத்தில் பிடுங்குதல் அல்லது அறுவடை செய்தல்.
    சரியான முறையில் பரிகரிப்புக்குட்படுத்தல் அதாவது இளநீரின் தோல் நீரிழப்பால் சுருக்கமடையாது இருக்க தகுந்த பதுகாப்பு செய்தல்- மெழுகுப் பூச்சிடல் பொலிதீன் சுருளிடல் போன்றவை.

    போதியிடல்.
    தகுந்த வெப்பநிலை ஈரப்பதன் என்பவற்றை கொள்கலனில் பேணூதல்

    என்பவை மிகமுக்கியமானவை.

    மெழுகு பூச்சு புலத்தில் மரவள்ளி கிழங்கு வேண்டியோருக்கு தெரிந்திருக்கும். இதுகும் அது பொனறது. ஆனால் இளநீருக்கு தனித்துவமாது.

    இவற்றிகுரிய தனித்துவமான தகவல்களை அதாவது வெப்பநிலை மெழுகு கலவை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளமுடியாது.

    இதைபற்றி இலங்கையில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

    மேலை நாடுகளில் செயற்கையில் களைத்து இயற்கையை நாட எம் தாயகத்தில் இயற்கையை புறந்தள்ளி கோலாக்களில் முழ்கிகோண்டிருக்கிறோம்.

    Wednesday, March 09, 2005

    பனி.....

    இம்முறை பனிவிழுந்தபோது எடுத்தது.....

    Image Hosted by ImageShack.us

    Image Hosted by ImageShack.us

    Image Hosted by ImageShack.us

    Image Hosted by ImageShack.us

    Image Hosted by ImageShack.us

    Monday, March 07, 2005

    பாவிக்கப்பட்ட மின்கலங்களால் சூழல் மாசாக்கம்

    ஐரொப்பா மற்றும் வளர்ந்த நாடுகளில் காணப்படும் தரப்படுத்தி கழிவு சேகரிப்பு முறையைப் பார்த்தபோது எனது சிந்தனைக்கு எமது தாயகத்தில் பாவிக்கபட்ட மின்கலங்களை வீட்டு குப்பை கிடங்கில் எறிவதும் மனகண்ணில் நிழலாடியது.
    இதை எழுதவும் துண்டியது.

    பல்வேறுபட்ட மின்கலங்கள் பற்றி மேலோட்டமான ஒரு பார்வை
    1. மூல மின்கலங்கள்
    கொண்டுள்ள இரசாயனங்கள்
    துத்த நாகம் ,மங்கனீரொட்சைட்டு, பொட்டாசியம் அல்லது சோடியம்ஐதரொட்சைட்டு

    2. காபன் துத்த நாக மின்கலங்கள்
    கொண்டுள்ள இரசாயனங்கள்
    துத்த நாகம் . மங்கனீசு, அமோனியம் குளொரைட்டு, துத்த நாக குளொரைட்டு

    3. ஈய அமில மின்கலம்
    கொண்டுள்ள இரசாயனங்கள்
    ஈயம், ஈயவீரோட்சைட், சல்பூரிக்கமிலம்

    4. இலிதியம் மின்கலங்கள்
    கொண்டுள்ள இரசாயனங்கள்
    இலிதியம்-மங்கனீர்ஈரொட்சைட்டு, இலிதியம் சல்பரீரொட்சைட்,
    தயோனைல் குளொரைட்ää இலிதியம்

    5. மக்னீசிய மின்கலங்கள்
    கொண்டுள்ள இரசாயனங்கள்
    மக்னீசியம், மக்னீசியம் புரொமைட், அல்லது மக்னீசியம்
    பேகுளோரைட்

    6. பாதரச மின்கலங்கள்
    கொண்டுள்ள இரசாயனங்கள்
    பாதரசம், பாதரசஈரோட்சைட், பொட்டாசியம் ஐதரொட்சைட்

    7. வெள்ளி மின்கலம்
    கொண்டுள்ள இரசாயனங்கள்
    நாகம் , வெள்ளி குளொரைட் இலிதியம் அல்லது துத்தநாக
    குளொரைட், துத்தநாக சல்பைட்

    8. நிக்கல்-கட்மிய மின்கலங்கள்
    கொண்டுள்ள இரசாயனங்கள்
    கட்மியம், நிக்கல் ஒட்சிஐதரோட்சைட், பொட்டாசியம்
    ஐதரொட்சைட்

    9. வெப்ப மின்கலங்கள்
    கொண்டுள்ள இரசாயனங்கள்
    கல்சியம், கல்சியம் குரொமேற், இலிதியம் குளொரைட், பொட்டாசியம் குளொரைட்

    இம்மின்கலவகைகளில் பாதஇரசமின்கலங்கள் தற்போது பாவனையிலரிது.
    தாயகத்தில் அதிகம் பாவனையிலுள்ளது காபன் துத்த நாக மின்கலங்கள் ,ஈய அமில மின்கலம் ஆகியவையாகும்.

    இவை ஆங்காங்கு தரையில் வீசப்பட்டு கிடப்பது சாதாரணம். ஆதைவிட மண் வீடுகளில் சாணியுடன் காபன் துத்த நாக மின்கலங்களை உடைத்து பெறும் கரியை கலந்து கறுப்பு நிறத்துக்காக மெழுகுவார்கள்.
    அமிலமின்கலத்தை வெட்டிதிறந்து அமிலத்தை தரையிலுற்றிவிட்டு , ஈயகழிவுகளையும் வீசிஎறிந்து விட்டு கோது துவிசக்கரவண்டித்திருத்தகங்களில் காற்று ஒழுக்கு சோதிக்க பயன்படும்.

    இதன் பாதிப்பை அளவிட ஒரு சிறு கணிப்பு

    உதாரணத்துக்கு யாழ்குடாநாட்டில் அனைத்து இடப்பெயாவுக்கும் முன்
    10 இலட்சம் பேர் இருந்தார்கள் என கொள்வோம்
    ஒரு குடும்பம் சராசரி 4 உறுப்பினர்களாலானது என வைத்தால்
    250000 குடும்பங்கள்
    இவற்றில் பாதி எண்ணிக்கையான குடும்பங்களே மின்கலத்தை பாவிப்பதாக கொண்டால் 125000
    ஒவ்வொரு குடும்பமும் இரண்டு மாதத்துக்கு ஒருசொடி மின்கலங்கள் வீதம் பவித்தால்
    இரண்டு மதத்தில் 125000 சோடி மின்கலங்கள் தரைக்கு பொகபோகிறது.

    ஓருவருடத்தில் கணக்கு பாருங்கள்.


    அதைவிட பாதை திறந்தபின் ஒருவாரமும் பாவனைக்கு தாக்கு பிடிக்காத மலிவு மின்கலங்கள் குடாநாட்டை ஆக்கிரமித்தது வேறுகதை.

    பாதிப்புகள்
    இவ்விரசாயன கூறுகள் மண்ணை மசாக்கம் செய்யலாம்
    மழை நீரில் கழுவி செல்லப்பட்டு நீர்நிலைகள் மாசாக்கம்
    நிலத்தடி நீர்வள மாசாக்கம்
    உணவுசங்கிலியுடு கடத்தபட்டு உயர்விலங்களை பாதிக்கலாம்

    குடாநாடின் நில்தடி நீர்வளம்
    உவர் நீர் உட்புகல்
    விவசாய செய்கையால் நைத்திரேற்று மாசாக்கம்
    மலசலகூட குழிகளால் மாசாக்கம் அடைவது ஏற்கனவே நிருபிக்க பட்டது.


    மின்கலமாசாக்கம் இன்னும் யாரது கவனத்துக்கும் வரவில்லை.
    மின்கல பாவனையை கட்டுபடுத்த முடியாது ஆனால் கண்டபடி வீசியெறியாது விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

    போருக்குள் அல்லது இப்போது இது சாத்தியமல்ல என கூறலாம். ஆனால் தாயகத்திற்கான எதிர்கால திட்டமிடலில் இது பற்றி கவனம் செலுத்தலாமில்லயா?

    Sunday, March 06, 2005

    கொள்ளை கொள்ள எண்ணமில்லை

    காதலை கற்பனை எனவில்லை....
    காதலிக்கும். எண்ணமில்லை...
    கல்லூரி நட்பு
    காலமெல்லாம் தொடர எண்ணி
    காத்திரமாய் பழகியதை - தப்பர்த்தம் கொள்ளாதே.....

    மங்கையுன் மனதை
    மாற்றவும் எண்ணவில்ல
    மதிமயக்கி
    கொள்ளை கொள்ள எண்ணமில்லை

    உன் நட்பு தொடர்ந்தாலே...
    ஆனந்தம் என்வசம்.
    எப்போதும்......

    [நட்பு காதலானதாக சொன்ன தோழிக்கு பதில்]

    சேயற்படு உணவுகள் [Functional foods]

    சேயற்படு உணவுகள்

    சேயற்படு உணவுகள் எனப்படுபவை திருப்தி தரக்கூடிய வகையில் உடலின் ஒனறுக்கு மேற்பட்ட செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவதுடன் தமது போசணை செயற்பாடுகளுக் மேலதிகமாக உடல் சுகநலத்தை மேம்படுத்துவதுடன் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைப்பவையுமாகும். இவை சாதாரண உணவு வகையிலிருந்து மாறுபடாதிருப்பதுடன் சாதாரணமாக உள்ளெடுக்கப்படும் அளவிலேயே தகுந்த விளைவை கொடுப்பவையாக இருக்க வேண்டும்.
    சேயற்படு உணவின் ஆக்க கூறுகள்
    1. நுண் உயிரிகள்
    உ-ம் இலத்திரிக்கமில பகர{ரியா.
    கிடைக்கும் சுக நலன்கள்
    -- குடல்களில் காணப்படும் நுண்ணங்கிகளின் செயற்பாட்டை ஊக்குவித்தல்
    - வயிற்றோட்டம் மலசிக்கலை குறைத்தல்
    - நோயெதிர்புத்திறனை கூட்டுதல் அல்லது உறுதிபடுத்தல்
    - கோலஸ்திரோல் அளவை குறைத்தல்
    - குத புற்று நோய் மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகளை குறைத்தல்
    கொண்டுள்ள உணவுகள்
    - தயிர்-
    மோர்-
    யோகட்
    2. நார் பொருட்கள், சமிபாடடையாத பல் சக்கரைட்டுகள்.
    உ-ம் ஒலிகோ சக்கரைடடுகள் பெக்ரின்
    கிடைக்கும் சுக நலன்கள்
    - குடல்களில் காணப்படும் நுண்ணங்கிகளின் செயற்பாட்டை ஊக்குவித்தல்
    - வயிற்றோட்டம் மலசிக்கலை குறைத்தல்
    - நோயெதிர்புத்திறனை கூட்டுதல் அல்லது உறுதிபடுத்தல்
    - கோலஸ்திரோல் அளவை குறைத்தல்- குத புற்று நோய் மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகளை குறைத்தல்
    - கல்சியம் மக்னீசியம் குடலில் அகத்துறுஞ்சபடுவதை அதிகரித்தல் ஒஸ்ரியோபொறோசிசை குறைத்தல்ஸ
    கொண்டுள்ள உணவுகள்
    - மரக்கறி பழவகைகள்
    3. விற்றமின்கள்
    உ-ம் போலிக்கமிலம் விற்றமின் பி6 ,பி12, டி, கெ
    கிடைக்கும் சுக நலன்கள்
    - இதய நோய்களை குறைத்தல்
    - ஒஸ்ரியோபொறோசி ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைத்தல்
    கொண்டுள்ள உணவுகள்
    போலிக்கமிலம- இலை மரக்கறிகள்
    விற்றமின் பி6 - தானியங்கள் ,மரக்கறிகள், பால் ,இறைச்சி
    விற்றமின் பி12 - ஈரல் ,பால் ,இறைச்சி [தாவர உணவு உண்பவர்களுக்கு பாலும் பாற் பொருட்களுமே இவ் விற்றமினை வழங்கும்]
    விற்றமின் டி - முட்டை ,பால் ,மீனெண்ணெய் ,மதுவம்
    விற்றமின் கெ - மரக்கறி ,பழவகைகள், தாவர எண்ணெய் வகை ,மீன் ,ஈரல்

    4. கனியுப்புகள்
    உ-ம் கல்சியம் ,மக்னீசியம், நாகம்
    கிடைக்கும் சுக நலன்கள்
    - நோயெதிர்புத்திறனை கூட்டுதல் அல்லது உறுதிபடுத்தல்
    - ஒஸ்ரியோபொறோசி ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைத்தல்
    கொண்டுள்ள உணவுகள்
    இலை மரக்கறிகள் ,பால் ,இறைச்சி , ஈரல், முட்டை
    5. ஒட்சியேற்ற எதிரிகள்
    உ-ம் விற்றமின் ஈ ,விற்றமின் சி ,கரோட்டின், பசுந் தேயிலை[Green tea]
    கிடைக்கும் சுக நலன்கள்
    - புற்று நோய் ஏற்படும் சாத்தியத்தை குறைத்தல்
    - டி .என் எ ஒட்சியேற்றத்தை குறைத்தல்
    - முதிர்ச்சியை குறைத்தல்
    கொண்டுள்ள உணவுகள்
    - விற்றமின் ஈ - மரக்கறிகள் ,வித்துகளின் முளையம் ,தாவர எண்ணெய் வகை
    - விற்றமின் சி - பழ வகைகள் ,மரக்கறிகள்
    - கரோட்டின் - பழ வகைகள் ,இலை மரக்கறிகள் ,கரட் முட்டை ,பூசணிக்காய்
    6. புரதங்கள் பெப்ரைட்டுகள் அமினோ அமிலங்கள்
    உ-ம் பால் புரத முப் பெப்ரைட்டுகள்
    கிடைக்கும் சுக நலன்கள்
    - குருதி அழுத்தத்தை குறைத்தல்
    கொண்டுள்ள உணவுகள்
    - தயிர்
    - மோர்
    - யோகட்
    7. கொழுப்பமிலங்கள்
    உ-ம் ஒமேகா 3 கொழுப்பமிலம்
    கிடைக்கும் சுக நலன்கள்
    - இதய நோய்களை குறைத்தல்
    - தோல் புற்று நோய் ஏற்படும் சாத்தியத்தை குறைத்தல்
    கொண்டுள்ள உணவுகள்
    - சோய அவரை எண்ணெய் நல்லெண்ணெய்
    8. தாவர இரசாயனங்கள்
    உ-ம் பைட்டஸ்ரரோல் ஐசொபிளேவோன்கள்
    கிடைக்கும் சுக நலன்கள்
    குருதி கொலஸ்திரோலை குறைத்தல்
    ஓமோன்களுடன் சம்பந்தபட்ட நோய்களை சீர்ப்படுத்தல்
    கொண்டுள்ள உணவுகள்
    - தாவர எண்ணெய்கள்